(அ) தமிழ்மொழி வளர்ச்சி
மிக பழமையானதும் நீண்டகால வரலாற்றைக் கொண்டதுமான தமிழ்மொழி திராவிட மொழிக்குடும்பதை சேர்ந்தவையாகும். மிகப்புராதன காலந்தொட்டு இக்காலம் வரையும் தமிழ்மொழி வளர்ச்சி அடைந்துள்ள விதத்தை நோக்குவோம்.
(அ.அ) புராதனகாலம்
மிகப்பழங்காலந் தொட்டு இன்றுவரை தமிழ் மொழியில் பல்வேறு கலாசாரங்களின் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மொழியின் இன்றைய உருவம் இவற்றின் பெறுபேறு எனக் கூறலாம்.பல்வேறு காலப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியின் மொத்த உருவமே இன்றைய தமிழ்மொழி. உலகில் பல மொழிகள் தோன்றி வழங்கி மறைந்து போயின.ஒரு சில மொழிகள் மட்டும் இன்னும் அழியாமல் நிலைபெற்றுள்ளன. அவ்வாறு நிலைபெற்றுள்ள மொழிகளில் சில பேச்சு வழக்கிழந்து இலக்கிய மொழியாக உள்ளன. இவ்வாறு தோன்றி செல்வாக்குடன் வளர்ந்து இன்றளவும் வாழ்ந்து விளங்கும் மொழிகளுக்குள் ஒன்று
நவீன காலம் - கிபி . 17ம் நூற்றாண்டு- இன்றுவரை
தொன்மையான காலம் - கிமு. 30ம் நூற்றாண்டு- கிமு. 3ம் நூற்றாண்டு
சங்ககாலம் - கிமு. 3 ம் நூற்றாண்டு- கிபி . 3ம் நூற்றாண்டு
சங்கமருவிய காலம் - கிபி . 3 ம் நூற்றாண்டு- கிபி . 6ம் நூற்றாண்டு
பல்லவர் காலம் - கிபி . 6 ம் நூற்றாண்டு- கிபி . 9ம் நூற்றாண்டு
சோழர் காலம் - கிபி . 9 ம் நூற்றாண்டு- கிபி .13ம் நூற்றாண்டு