tamil world

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த சங்ககாலம்

தமிழ்ச்சங்கங்கள்


தமிழ் மொழியை, பண்பாட்டை, சமூகத்தை பாதுகாத்து, பகிர்ந்து, கொண்டாடி, மேம்படுத்தி, வளர்ப்பதை நோக்காக கொண்டு உலகமெங்கும் தமிழர்கள் வசிக்கும் ஊர்களில் ஏற்படுத்தப்படும் ஒர் அமைப்பே தமிழ்ச் சங்கம் ஆகும். இச்சங்கம் பொதுமக்களாலேயே, அனைவரையும் உள்வாங்கும் மனப்பாங்குடன் அமைக்கப்படுகின்றது. பொதுவாக தமிழ்ச் சங்கம் இலாப நோக்கு இல்லாமலும், சமய, சாதி, வர்க்க சார்பு அற்றதாகவும், தீவர அரசியல் நோக்குகள் அற்றதாகவும் அமையும். குறிப்பாக வெளிநாடுகளில் அமைக்கப்படும் தமிழ் சங்கங்கள் தமிழர்கள் எங்கிருந்து ஒர் ஊருக்கு வந்தாலும், தமிழ் என்ற பொது அடிப்படையில் தமிழ் சங்கத்தை அமைப்பர். இருப்பினும் ஒரே ஊரில் சில வேறுபாடுகள் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் அமைவதும் உண்டு. தற்காலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புலவர்களை பெரும்பாலும் கொண்டு அரசர்களால் அமைக்கப்பட்ட பண்டைத் தமிழ்ச் சங்களில் இருந்து வேறுபட்டது. பண்டைத் தமிழ்ச் சங்கங்கள் தமிழை ஆய்வதற்கு, இலக்கிய படைப்புக்களை வெளிப்படுத்துவதற்கு களமாக அமைந்தன. அரசர்கள் அல்லது செல்வந்தர்கள் அச் சங்கங்களை ஆதரித்தமையால் படைப்புக்கள் பெரும்பாலும் அவர்களை மகிழ்விக்கும் இன்பவியல் இலக்கியங்களாகவோ அல்லது புகழ்ச்சி இலக்கியங்களாகவோ அமைந்தன. தற்காலத் தமிழ் சங்கங்கள் ஒரு சனசமூக அமைப்பாக, பொதுமக்களைப் பெரும்பாலும் உள்வாங்கி, முன்னிறுத்தி, பொது மக்களாலேயே கட்டமைக்கப்படுகின்றன. தற்காலத் தமிழ்ச் சங்கங்கள் கீழிருந்து எழும் அமைப்புகளாகவே இருக்கின்றன.

No comments:

Post a Comment