tamil world

தென்னாட்டில் சைவம்

(அ) சங்ககாலத்தில் சைவம்

        பண்டைத் தமிழ் நூல்களிலிருந்து சைவசமயத்தின் வளர்ச்சியை அறியக்கூடியதாக இருக்கிறது.நில அமைப்புக்கு ஏற்றவாறு பண்டைத் தமிழ் மக்களது ஒழுக்கங்களும் வழிபாட்டு முறைகளும் அமைந்தன.சங்ககால மக்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய நிலங்களுக்கு உரிய தெய்வங்களாகமுறையே முருகன் திருமால் இந்திரன் வருணன் கொற்றவை ஆகிய தெய்வங்களை போற்றி வாழ்ந்தனரென்றும் இந்த தெய்வங்களுக்கு  எல்லாம் மேலாக ஒரு பரம்பொருள் உள்ளது என நம்பினார்கள்.
               சங்ககால இலக்கியங்களிலே பிறவா யாக்கை பெரியோன் நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் கறைமிடற்று அண்ணல் நுதல்விழி நாட்டத்து இறையோன் சூலம் பிடித்த சுடர்படைக்காலக்கடவுள் பிறங்கு நீர் சடைக்கரந்தான் ஏற்று ஊர்தியான் என வரும் தொடர்கள் சைவர்கள் போற்றும் சிவனை குறிக்கின்றன என்பது புலப்படும்.
            சிவம் என்ற சொல் செம்மை அளிப்பது மங்களத்தை அளிப்பது எனப் பொருள்படும். அது செம்மை சிவப்பு எனும் அடியாக பிறந்தது. செம்மேனியனான சிவன் “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என உமையம்மையோடு இணைத்து பேசப்படுவதை நோக்கும் பொழுது சிவமும் சக்தியும் ஒன்றிணைந்தவை என்ற கருத்தும் சைவம் ஆரம்ப காலத்திலேயே தோன்றிவிட்டது எனக் கொள்ளலாம்.
                  சங்கத்தமிழ் இலக்கியங்களிலே கொற்றவை பாலை நிலத்தெய்வமாக கொள்ளப்பட்டு அப்பகுதி மக்களாலே துதிக்கப்பட்டாள். சிலப்பதிகாரத்திலும் போற்றப்படுகிறாள். இக்கொற்றவை வழிபாடே பின் சக்தி வழிபாடாயிற்று என்பர். எனினும் சிவ வழிபாடே பண்டைக் காலந்தொட்டே தென்னிந்தியாவிற் சிறப்பிடம்பெற்றிருந்தது. சங்கமருவிய காலத்துக்கு உரியனவெனக் கொள்ளப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சிவனுக்கும் முருகனுக்கும் பிற தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன என்று கூறப்படுவதோடு சிவனுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது.

                         “பிறவா யாக்கை பெரியோன் கோவிலும்
                         அறுமுகச் செவ்வேள்அணிதிகள் கோவிலும்......”
                                                                                 (சிலப்பதிகாரம்)
                         “நூதல் விழி நாட்டத்து இறையோன் முதலாப்
                          பதிவாழ் சதுக்க பூதமீறாக”
                                   (மணிமேகலை) 

  சங்ககால மக்கள் நடுகல் முதலான வழிபாடுகளில்
ஈடுபட்டிருந்தனர்

2 comments:

  1. நன்றாக உள்ளது நான் விரும்புகிறேன்

    ReplyDelete